காங்கிரஸ் வென்றால் 100 நாள் வேலைத்திட்ட தினக்கூலி ₹400 ஆக உயர்த்தப்படும் : ராகுல் காந்தி அறிவிப்பு!

காங்கிரஸ் வென்றால் 100 நாள் வேலைத்திட்ட தினக்கூலி ₹400 ஆக உயர்த்தப்படும் : ராகுல் காந்தி அறிவிப்பு!

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006-ம் ஆண்டு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்’ கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை அதிகரித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான தினக்கூலி உயர்த்தப்பட்டது குறித்து ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள்! பிரதமர் உங்கள் சம்பளத்தை 7 ரூபாய் உயர்த்தியுள்ளார்.

இப்போது அவர் உங்களிடம், ‘இவ்வளவு பெரிய தொகையை என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கக் கூடும். மேலும் 700 கோடி ரூபாய் செலவு செய்து, உங்கள் பெயரில் ‘நன்றி மோடி’ என்ற பிரச்சாரமும் தொடங்கப்படலாம்.

பிரதமர் மோடியின் இந்த மகத்தான பெருந்தன்மையால் கோபம் கொண்டவர்கள், நினைவில் கொள்ளுங்கள், ‘இந்தியா’ கூட்டணி அரசு அமைந்த முதல் நாளே 100 நாள் வேலை தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.