அமைச்சர் ‘அல்லேலுயா பாபு’ வாலை சுருட்டிக் கொண்டிருந்தால் அவருக்கு நல்லது : கொந்தளித்த ஹெச்.ராஜா!!

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்திற்கு தேவையில்லாத இடையூறுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் அளிப்பதாக பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க தனது குடும்பத்துடன் வந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, சாமி தரிசனத்துக்குப் பின் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்ய வந்தேன். 14 ஆண்டுகள் நீதி போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் இந்த கோயிலை அரசு எடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை எனக் கூறியது.

அதனால் அரசியல் சட்ட பிரிவு 26 இன் படி தீட்சிதர்கள் வசம்தான் கோயில் இருக்க வேண்டும் என தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்து பிரிட்டிஷ் கலெக்டர் தெளிவாக எழுதி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை, கோயில்களை கொள்ளை அடிக்கிற துறையாக இருக்கிறது. கோவில் நகைகளை அபகரிப்பது, நிலங்களை அபகரிப்பது, தங்கங்களை அபகரிப்பது, தங்கத்தை பிஸ்கட் ஆக்கி பிஸ்கட்டை சாப்பிடுவது என இருக்கிறது.

இந்து விரோத அமைப்பாக இருக்கக்கூடிய அறநிலையத்துறைக்கு அமைச்சராக இருப்பது அல்லேலுயா பாபு, அவரும் இந்து இல்லை. அமைச்சர் அல்லேலுயா பாபுவான சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்திற்கு ஏதாவது இடையூறுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பள்ளிக்கூடத்தில் நல்லா படிக்கும் பையனை விஷமம் செய்யும் பையன் கிள்ளி விடுவான், பேனாவால் குத்துவான் அந்த மாதிரி இந்த அல்லேலுயா பாபு இடையில் இடையில் தில்லை சபை கோவில் நிர்வாகத்தை கிள்ளுவது, குச்சியால் குத்துவது இந்த மாதிரி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். அவர் தனது நிலை அறிந்து வாலைச் சுருட்டி கொண்டு இருப்பது நல்லது.

முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதியே, தான் கிறிஸ்தவர் எனக் கூறி இருக்கிறார். நான் சொன்னேனா.. இல்லை.. அண்ணாமலை சொன்னாரா? முதல்வர் குடும்பமே கிறிஸ்தவ குடும்பமாக மாறி இருக்கிறது.

இந்து விரோதிகள் தான் அவர்கள். ரம்ஜானுக்கு, கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்லும் ஸ்டாலின் இந்து பண்டிகைக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை?

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.