செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கொடுத்தா சிறையில் உள்ள 70% கைதிகளும் ஆஸ்பத்திரிக்குதான் போவாங்க.. துஷார் மேத்தா எதிர்ப்பு!

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கொடுத்தா சிறையில் உள்ள 70% கைதிகளும் ஆஸ்பத்திரிக்குதான் போவாங்க.. துஷார் மேத்தா எதிர்ப்பு!

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்ததை அடுத்து அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி கடந்த ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்ட நிலையில் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக உள்ளதால் அவரை ஜாமீனில் விட்டால் சாட்சியகங்கள் அழிக்கப்படும் என அமலாக்கத் துறை வாதத்தை ஏற்று நீதிபதி ஜெயசந்திரன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து செந்தில் பாலாஜி மேல் முறையீடு செய்தார். இதனிடையே அவருக்கு கடந்த 22 ஆம் தேதி 11 ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி, செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் சதீஷ் சந்திரா, திரிவேதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ரோத்தகி தனது வாதத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் இந்த இடத்தில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்றெல்லாம் எந்த சட்டமும் சொல்லவில்லை.

அவருக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் பைபஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது நீதிபதி திரிவேதி குறுக்கிட்டு இன்று பைபாஸ் அறுவை சிகிச்சை எல்லாம் குடல் வால் அறுவை சிகிச்சையை போல் சாதாரணமாகிவிட்டன என்றார்.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜிக்கு உடல்நலம் குறைப்பாட்டை வைத்து ஜாமீன் கொடுத்தால், சிறையில் 70 சதவீதம் கைதிகளுக்கும் உடல்நலம் பாதிக்கப்படும். அவர்களுக்கும் ஜாமீன் கொடுத்துவிட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.