கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் 2-வது நாளாக இன்று சோதனையில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வருமான வரித்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக எனது உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் உறவினர்கள் ஆகியோரின் வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சோதனை நடத்தியுள்ளனர்.
இதில் பல தொழில் நிறுவனங்கள் நான் பள்ளிக்கல்வி முடிப்பதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டவை ஆகும். அவர்கள் அனைவரும் வருமான வரியை முழுவதுமாக செலுத்திக் கொண்டு இருப்பவர்கள்.
ஏற்கனவே நான் கூறியது போல், ஏதேனும் வரி ஏய்ப்பு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த சோதனைகள் இன்னும் ஓரிரு நாட்கள் நடைபெறும் என்று கூறுகிறார்கள். அனைத்து சோதனைகளும் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களை மீண்டும் சந்தித்து விளக்கமளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.