மன்னிப்பு கேட்டீர்களா? இந்திய மருத்துவ சங்க அதிகாரியிடம் அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்…!!

யோகா குரு ராம்தேவின், ‘பதஞ்சலி’ நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற கண்டிப்பை தொடர்ந்து, ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மன்னிப்புக் கேட்டனர்.

இது தொடர்பாக, பி.டி.ஐ.செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஆர்.வி.அசோகன், இந்திய மருத்துவ சங்கத்தை உச்ச நீதிமன்றம் விமர்சித்தது துரதிர்ஷ்டவசமானது’ என, கருத்துத் தெரிவித்தார். இந்த செய்தி பல்வேறு நாளிதழ்களில் வெளியானது.

வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தை ஆர்.வி.அசோகன் விமர்சித்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து தன் பேச்சுக்கு நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்டார்.

ஆயினும் தனிப்பட்ட முறையில் நாளிதழ்களில் அசோகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரது சொந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, ஆர்.வி.அசோகனின் மன்னிப்பு செய்தி பல்வேறு நாளிதழ்களில் வெளியிடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில், தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று, நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வு கூறியதாவது: ஐ.எம்.ஏ., தலைவர் ஆர்.வி.அசோகனின் நேர்காணல் இடம்பெற்ற அனைத்து நாளிதழ்களிலும் மன்னிப்பு செய்தி வெளியாகி இருக்க வேண்டும். ஆர்.வி.அசோகனின் நேர்காணல் வெளியான அனைத்து நாளிதழ்களிலும் மன்னிப்பு செய்தி வெளியிடப்பட்டதா? இவ்வாறு அமர்வு கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த ஐ.எம்.ஏ., தரப்பு வழக்கறிஞர், ‘இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதையடுத்து வழக்கை வரும் 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.