நாளை மறுநாள் (28 ஆம் தேதி) ஜனாதிபதியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
எனவே ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின் போது கவர்னரின் செயல்பாடுகள் குறித்த கோரிக்கை வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதக்களுக்கு கவர்னர்கள் முடிவெடுக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில் தான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி பயணம் அமைய இருக்கிறது.
இந்த நிலையில் கவர்னர் ரவி, மூன்று நாள் பயணமாக இன்று (ஏப்.,26) டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் இன்று பிற்பகல் 3:20 மணிக்கு கோவையில் இருந்து டில்லிக்கு புறப்படுகிறார். லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக – பா.ஜ., தலைவர்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வரும் சூழலில் பழனிசாமியின் பயணம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவர் நாளை இரவு டில்லியில் இருந்து கோவை திரும்புகிறார்.
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
This website uses cookies.