இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில் தான்… வாக்கு செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் முதல் ட்வீட்!
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி, தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 6 கோடியே 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
அந்தவகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது வாக்கை செலுத்தினார். சென்னை SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் காலை முதல் விறு விறு வாக்குப்பதிவு… 9 மணி நிலவரம் வெளியானது..!!!
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, நான் எனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். அதேபோல் வாக்கு உரிமை பெற்றிருக்க கூடிய அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வலியுறுத்திய முதல்வர், இந்தியா கூட்டணிக்கு நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.
இதையடுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முதல்வர்பதிவிட்டுள்ளார். அதில், நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன். அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள். நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.