ஆளுநரை மிரட்டுகிறாரா? திமுகவினரே பேசுவதற்கு தயங்கும் வார்த்தையில் சபாநாயகர் பேசியுள்ளார் : அண்ணாமலை கண்டனம்!

ஆளுநரை மிரட்டுகிறாரா? திமுகவினரே பேசுவதற்கு தயங்கும் வார்த்தையில் சபாநாயகர் பேசியுள்ளார் : அண்ணாமலை கண்டனம்!

இந்தாண்டுக்கான முதல் கூட்டம் என்பதால் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழில் பேசி தனது உரையை தொடங்கிய ஆளுநர் அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுவதும் படிக்காமல், அதில் குறிப்பிட்டிருந்த திருக்குறளை மேற்கொள்காட்டி வெறும் 4 நிமிடங்களை உரையை வாசித்து விட்டு அமர்ந்தார்.

தமக்கு அளிக்கப்பட்டுள்ள உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாகவும், அரசு தயாரித்த உரையை படிப்பது அரசியல் சாசனத்தை ஏளனம் செய்வது போல் அமையும் என்று கூறிய ஆளுநர் ஆர்என் ரவி, அரச தயாரித்த உரையின் உண்மைத் தன்மை மற்றும் நெறிகளுடன் தமக்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகக் கூறினார். மேலும், தேசிய கீதத்தை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் இசைக்க வேண்டும் என பலமுறை கூறியதாகவும், ஆனால், அதனை நடைமுறைப்படுத்தது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார். இறுதியில், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரம், ஜெய்ஹிந்த் எனக் கூறி ஆளுநர் உரையை முடித்தார்.

மேலும், அவை முன்னவர் துரைமுருகன் பேச தொடங்கிய போது, தேசிய கீதம் வாசிக்கப்படும் முன்பு அவையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி வெளியேறினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆளுநர் ஆர்என் ரவி மரபுகளை மீறி செயல்பட்டதாக ஆளும் கட்சியினர் குற்றம்சாட்டினர். அதேவேளையில், ஆளுநர் மரபுகளை கடைபிடித்ததாகவும், சபாநாயகர் தான் விதிகளை மீறி பேசியதாகவும் பாஜக தெரிவித்தது.

இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,
இன்று தமிழக சட்டசபையில் சபாநாயகர் திரு அப்பாவு மொழி பிரயோகம் செய்ததை கண்டு வியப்படைந்தேன்.
தி.மு.க. உறுப்பினராக உள்ளவர்களே பேசுவதற்கு பயன்படுத்துவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும் மொழியை தமிழக சட்டசபை சபாநாயகர் பயன்படுத்துகிறார்.

தற்செயலாக, TN DIPR இப்போது இந்த வீடியோவை நீக்கியுள்ளது, பேச்சாளரின் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்ததால் வெட்கக்கேடானது.

மாண்புமிகு தமிழக ஆளுநரை மிரட்டுகிறாரா?
புள்ளிவிவரங்களை காற்றில் வீசுவதும், மக்கள் பார்வையை கையாளுவதும் திமுகவுக்கு புதிதல்ல.

திரு அப்பாவு, PM CARES-ல் பணம் தேவை என்று சொல்வதை விட, திமுகவின் முதல் குடும்பத்திடம் கொள்ளையடித்த பணத்தை திரும்பக் கேட்கலாம், இது முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையும், பொறுப்பும் கொண்டது. இது குறைந்தபட்சம் நமது மாநிலத்தின் ₹8,50,000 கோடிக்கும் அதிகமான கடனை அழிக்க உதவும். முற்றிலும் வெட்கக்கேடானது! என பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

22 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

24 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

24 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

24 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.