ஓய்வுக்கு வருகிறதா ஒற்றைத் தலைமை விவகாரம்? திடீர் முடிவு..மகிழ்ச்சியில் அதிமுக…!!

சென்னையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சியின் புதிய பொறுப்புக்கு வந்ததும் முதல் வேலையாக ஓபிஎஸ் அன்கோ கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார் இபிஎஸ்.

நீங்க என்ன என்னை கட்சியில் இருந்து நீக்குவது? இன்றும் நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்; அந்த முறையில் இபிஎஸ் அன் கோ கட்சியில் இருந்து நீக்குவதாக பதிலடி கொடுத்தார் ஓபிஎஸ். இப்படி இருவரும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்க, அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனால் அப்செட்டான ஓபிஎஸ், பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீடும், தேர்தல் ஆணையத்தி்ல் கொடுத்துள்ள மனுவும் மாதக்கணக்கில் அப்படியே கிணற்றில் போட்ட கல்லாய் இருந்து வருகிறது. இந்த நிலையில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் அதிமுக மொத்தமும் தன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

எனவே இனிமேல் ஓபிஎஸ்ஸை ஒத்திவைத்துவிட்டு அரசியல் பேசினால் நன்றாக இருக்கும் என்று, மரியாதைக்காக அழுத்தம் திருத்தமாக சமீபத்தில் சொல்லிவிட்டு வந்தார் இபிஎஸ்.

ஆனால் அவரது முடிவை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளாத அந்த பிரபல கட்சி, ஓபிஎஸ்ஸும் எப்போதும்போல் கட்சியில் இணைந்திருந்தால்தான் அதிமுகவுக்கும் நல்லது; கூட்டணிக்கு நல்லது என்று இபிஎஸ்சுக்கு அட்வைஸ் செய்துள்ளது.

அட்வைஸ்சை கேட்டு அப்செட்டான இபிஎஸ், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அதனால உட்கட்சி விவகாரத்தில் அட்வைஸ் எல்லாம் செய்யாம என்னோட பேச்சை கேட்டு நடந்தா அந்த கட்சிக்கு நல்லது.

இல்லை… ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் மீண்டும் சேர்த்தே ஆகணும்னு சொல்லி அடம்பிடிச்சு, இரட்டை இலை முடுக்குறது போன்ற முடிவுக்கு கொண்டு போனால், அதனால் அதிமுகவைவிட அந்த கட்சிக்கு தான் இழப்பு… இது அவங்களுக்கும் நல்லா தெரியும்னு நினைக்கிறேன் என்று அணியின் மூத்த நிர்வாகிகளிடமும், ஆதரவாளர்களிடமும் சொல்லி வருகிறாராம் இபிஎஸ்.

கீழே இறங்கி வராத இபிஎஸ்சின் பிடிவாதத்தால், அதிமுகவில் ஓபிஎஸ்சின் ஆட்டம் அனேகமாக முடிவுக்கு வந்துவிட்டதாகவே அரசியல் அரங்கில் கருதப்பட்டது வந்தது.

இந்நிலையில், அதிமுக தலைமை யுத்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் நாளை முக்கிய அரசியல் பிரபலங்களை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.இந்த சந்திப்புக்கு பிறகாவது அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சி பூசல் ஒருவழியாக முடிவுக்கு வந்ததால் சரிதான் என்று மனம் நொந்து கூறிவருகின்றனர் அதிமுகவின் தீவிர விசுவாசிகள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.