ஆட்சியே போனாலும் கவலையில்லை சனாதனத்தை ஒழிப்போம்னு உதயநிதி சொன்னது உண்மைதான் : நாராயணன் திருப்பதி கிண்டல்!!

ஆட்சியே போனாலும் கவலையில்லை சனாதனத்தை ஒழிப்போம்னு உதயநிதி சொன்னது உண்மைதான் : நாராயணன் திருப்பதி கிண்டல்!!

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட 4 மாநிலங்களில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி இருந்தது. இந்த நிலையில் தற்போது 4 மாநில தேர்தல்களில் தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. மற்ற 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில்தான் 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள தோல்விக்கு காரணம் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன எதிர்ப்பு பேச்சுதான் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். உதயநிதியின் பேச்சு, சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக பாஜகவினர், காங்கிரஸ் தோல்விக்கு உதயநிதியின் சனாதனம் பற்றிய பேச்சுத்தான் காரணம் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழக பாஜக துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி, “சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது உண்மையாகி விட்டது” என எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், “சனாதனத்தை (ஹிந்து மதத்தை) ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது உண்மையாகி விட்டது. ‘INDIA’ கூட்டணியின் 2 அரசுகளை கவலையில்லாமல் பறிகொடுத்து நின்றாலும், போனது தங்களின் ஆட்சி இல்லை என்ற நிம்மதியில் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பாவம், அந்த நிம்மதி இன்னும் 4 மாதங்களில் பறிபோய் விடும் என்று தெரியாமல், புரிந்து கொள்ளாமல் சனாதனத்தை ஒழிப்பதற்காக மும்முரமாக, தீவிரமாக பணியாற்றி கொண்டிருக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின், “தெலுங்கானா , மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள். அனைத்துப் பிரிவினருக்கும் சாதகமான மாற்றம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு கொண்ட ஆட்சியை நடத்த வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளதையும் பாஜக நாராயணன் விமர்சித்துள்ளார்.

“வெற்றி பெறும் கட்சிகள்???? ஓ! அநேகமாக அவர் மழை பற்றிய விஷயத்தில் பிஸியாக இருக்கிறார். அதனால் தான் அந்த மாநிலங்களில் இந்த தேர்தல்களில் யார் வெற்றி பெற்றார்கள் என்று தெரியவில்லை.” என்று நாராயணன் திருப்பதி கிண்டல் செய்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.