அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறையின் மதிப்பீட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் 200 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உடல்நலத்தை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்கும்படி அவர் மனு தாக்கல் செய்து வந்தாலும், அவரது நீதிமன்ற காவல் பல முறை நீட்டிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கரூரில் பல கோடி மதிப்பிலான புதிய நவீன சொகுசு பங்களாவை கட்டி வருகிறார். இந்த நிலையில், அசோக் வீட்டில் வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அசோக் கட்டி வரும் புதிய வீட்டின் மதிப்பு, பரப்பளவு, கட்டுமான செலவுகள் குறித்து மதிப்பிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அசோக் ஆஜராகாமல் இருந்து வருகிறார். தற்போது, அவரது சொகுசு பங்களா வருமான வரித்துறையின் கண்காணிப்புக்குள் வந்திருப்பதால், அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.