பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் என்னும் பிரபல கட்டுமான நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் செய்து வரும் இந்நிறுவனத்தில் கடந்த 2019ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனிடையே, ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் பரபரப்பு குற்றம்சாட்டினார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், திமுக அரசு இந்நிறுவனத்திற்கு சாதகமான வேலைகளை சட்டவிரோதமாக செய்து வருவதாக குற்றம்சாட்டி இருந்தார்.
ஆனால், அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அந்நிறுவனம், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வியாபாரம் செய்து வருவதாகவும், தங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானவை என்றும் கூறியிருந்ததது.
ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துபட்டு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனம் கோவை L&T புறவழிச் சாலையில் நில விற்பனை செய்து வருவதும் சிங்காநல்லூர் போன்ற இடங்களில் வீட்டுமனைகள் விற்பனை செய்ய பணிகள் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை ஜி ஸ்கொயர் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.