காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல பட்டு சேலை விற்பனை கடையில் வருமானவரிதுறையினர் திடீர் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
பட்டு சேலைக்கு மிகவும் புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகரில் நூற்றுக்கணக்கான பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வரிஏய்ப்பு செய்து வருகின்ற நிலையில், காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல பட்டு சேலை உற்பத்தி நிறுவனமான ஸ்ரீ வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சென்னையிலிருந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து ஏழு அதிகாரிகள், மூன்று காவலர்கள் உட்பட சுமார் பத்து பேர் இரண்டு கார்களில் வந்து ஸ்ரீ வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் சோதனை செய்து வருகின்றார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இயங்கி வருகின்ற சாய் சில்க் கலாமந்திர் லிமிடெட் நிறுவனத்தின் அங்கமான ஸ்ரீ வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தொழிலதிபர் கோபிநாத் மக்கள் நீதி மய்த்தின் மாநில பொது செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் நடத்தப்படும் வருமான வரித்துறை ரெய்டால் காந்தி சாலையில் உள்ள மற்ற பட்டு சேலை உற்பத்தி நிறுவனங்களில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.