காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல பட்டு சேலை விற்பனை கடையில் வருமானவரிதுறையினர் திடீர் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
பட்டு சேலைக்கு மிகவும் புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகரில் நூற்றுக்கணக்கான பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வரிஏய்ப்பு செய்து வருகின்ற நிலையில், காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல பட்டு சேலை உற்பத்தி நிறுவனமான ஸ்ரீ வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சென்னையிலிருந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து ஏழு அதிகாரிகள், மூன்று காவலர்கள் உட்பட சுமார் பத்து பேர் இரண்டு கார்களில் வந்து ஸ்ரீ வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் சோதனை செய்து வருகின்றார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இயங்கி வருகின்ற சாய் சில்க் கலாமந்திர் லிமிடெட் நிறுவனத்தின் அங்கமான ஸ்ரீ வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தொழிலதிபர் கோபிநாத் மக்கள் நீதி மய்த்தின் மாநில பொது செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் நடத்தப்படும் வருமான வரித்துறை ரெய்டால் காந்தி சாலையில் உள்ள மற்ற பட்டு சேலை உற்பத்தி நிறுவனங்களில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.