ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொவ்வூர் பிராமண குடேம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகனின் தீவிர ஆதரவாளர்.
ஆந்திராவில் அக்கட்சி படுதோல்வி அடைந்ததை தாங்கி கொள்ள முடியாமல் இருந்த ராஜு தனது பிள்ளைகளுடன் ராஜமுந்திரி – கொவ்வூரு கம்மன் பாலத்தின் மேலிருந்து கோதாவரி ஆற்றில் குதித்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
அப்போது வேறு ஒருவரிடம் செல்போனில் வீடியோ எடுக்கும்படி கூறி சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தும் ஜெகன்மோகன் ரெட்டி ஏன் தோல்வியடைந்தார் என்பதை விசாரிக்க வேண்டும்.
மின்னனு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதை குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்படாமல் வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தினால் ஜெகனே அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் எனக்கூறிய அவர் போலீசார் வந்தால் ஆற்றில் குதிப்பேன் என்று வீடியோவில் பேசினார். அந்த வீடியோ வைரலாகியது.
இந்த வீடியோவை பார்த்த போலீசார் உடனடியாக அங்கு வந்து பார்த்து அவர்களை சமாதானம் செய்து தடுத்து நிறுத்தினர். பின்னர் கொவ்வூர் நகர போலீசார்
ராஜு குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து கவுன்சிலிங் செய்து பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.