சென்னை : ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவதூறு பரப்புவதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் பரஸ்பரமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, காணொளி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேசவிரோதி என்று கூறியதாக குற்றம்சாட்டினார். இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்ததுடன், கண்டனமும் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேச விரோதிகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ கூறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதில் உண்மையில்லை என்றும், ஜல்லிக்கட்டை தடை செய்ய காரணமாக இருந்த திமுக இன்று அதிமுகவை களங்கப்படுத்துவதா? எனக் கூறினார். மேலும், அவதூறுகளை பரப்புவது முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல என்றும், அவர் அட்வைஸ் செய்துள்ளார்.
ஏற்கனவே, திமுக – காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நீட் தேர்வை அதிமுகதான் கொண்டு வந்ததாக மடை மாற்றி விடும் வேளையில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது தேர்தலுக்காக ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் பொய் பிரச்சாரம் செய்வதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.