சென்னை : ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவதூறு பரப்புவதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் பரஸ்பரமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, காணொளி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேசவிரோதி என்று கூறியதாக குற்றம்சாட்டினார். இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்ததுடன், கண்டனமும் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேச விரோதிகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ கூறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதில் உண்மையில்லை என்றும், ஜல்லிக்கட்டை தடை செய்ய காரணமாக இருந்த திமுக இன்று அதிமுகவை களங்கப்படுத்துவதா? எனக் கூறினார். மேலும், அவதூறுகளை பரப்புவது முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல என்றும், அவர் அட்வைஸ் செய்துள்ளார்.
ஏற்கனவே, திமுக – காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நீட் தேர்வை அதிமுகதான் கொண்டு வந்ததாக மடை மாற்றி விடும் வேளையில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது தேர்தலுக்காக ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் பொய் பிரச்சாரம் செய்வதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.