வேலூர் : ஆளும் திமுகவின் பண பலத்தையும் மீறி ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்ள குடியாத்தம் வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது , அவர் பேசியதாவது :- ஆளும் திமுக இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைத்து வருகிறது. அந்த பண பலத்தையும் மீறி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைவது என்பது எல்லோருடைய கருத்தாகவும், என்னுடைய கருத்தாகவும் இருக்கிறது.
இந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைய வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது நான் தான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டு. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று சொல்ல முடியாது. திமுக ஆட்சியில் நன்மையும் செய்யவில்லை. தீமையும் செய்யவில்லை.
மேலும், சென்னையில் கடலின் நடுவே கலைஞரின் பேனா வடிவில் சிலை வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் நான் கூட பேரறிஞர் அண்ணாவின் புத்தகத்தை வைக்கலாம் என்று சொல்வேன் ஏற்றுக் கொள்வார்களா? காமராஜர் சிலையை வைப்பேன் என்று சொல்வேன் ஏற்றுக் கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பினார்
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என தெரிவித்தார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
This website uses cookies.