பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜாவை பல்வேறு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கருத்து தெரிவித்துள்ளார்.
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. இந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை ஒன்றை எழுதியிருந்தார். அதாவது, பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். என பிரதமர் மோடியை அவர் புகழ்ந்து எழுதியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. அதேவேளையில், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இளையராஜாவின் கருத்தை வரவேற்று, ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றன.
கடும் விமர்சனங்கள் எழுந்த போதிலும், எனது சொந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இளையராஜாவிற்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது :- ஒரு கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும், இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்பதால் ஒரு இசை மாமேதையை கடுமையாக விமர்சிப்பது சரியானதா..? எதிர்க்கட்சிகள் சகிப்புத் தன்மை இல்லாமல் செயல்படுகின்றன.
தமிழ்நாடு,கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். இது சகிப்புத்தன்மை இல்லாத அரசியலை காட்டுகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று இருக்கின்றன. எதிர் கட்சிகள் தேர்தல் தோல்வியின் காரணமாக ஏமாற்றமடைந்து எதிர்மறை அரசியல் செய்கின்றன. இதன் காரணமாகத்தான் இது போன்ற கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது, எனக் கூறினார்.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.