இதை மட்டும் பண்ணுங்க.. ஒரு மணி நேரத்தில் ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவர் : ஆர்பி உதயகுமார் ஐடியா!

இதை மட்டும் பண்ணுங்க.. ஒரு மணி நேரத்தில் ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவர் : ஆர்பி உதயகுமார் ஐடியா!

மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சார்பில் எழை, எலியோருக்கு வழங்கும் திட்டத்தின் 4 ஆவது ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் 50 க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவுகள் வழங்கினார்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, மக்கள் விரோத நடவடிக்கைகளை திமுக தலைமையிலான அரசு செய்து வருகிறது, நீர்நிலைகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

மதுரை மாஸ்டர் பிளானில் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் நீக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது, திமுக கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர்களின் மனசாட்சிப்படி கூற வேண்டும்.

திமுக நீட் தேர்வை ரத்து செய்ய 3 ஆண்டுகளாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, முதல்வர் அவருடைய 3 ஆண்டுகால ஆட்சி குறித்து மிகைப்படுத்தி தான் பேசுவார்.

ஆனால் மக்களுடைய முகத்தை பார்த்தால் எவ்வளவு வேதனை, கோபத்துடன் உள்ளார்கள் என தெரியவரும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

மக்களிடம் 300 ஆண்டுகளில் ஏற்றப்பட வேண்டிய சுமைகள் 3 ஆண்டுகளில் திமுக ஏற்றியுள்ளது, கோடை காலங்களில் மின் பற்றாக்குறை சமாளிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நில அபகரிப்பு என்பது திமுகவின் முகவரியாக உள்ளது, திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் நிலங்களை அபகரிக்கும் வேலைகளை செய்யும், திமுகவிடரிடம் நிலங்களை பறிகொடுத்த மக்கள் அச்சப்பட தேவையில்லை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிலங்கள் திருப்பி வழங்கப்படும்.

நெல்லை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மரணம் தற்கொலையா? கொலையா? என தெரியவில்லை, காவல்துறை விசாரணையில் அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என தெரியவில்லை.

காவல்துறையே சுதந்திரமாக செயல்பட விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்படுவார், நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரண வழக்கில் காவல்துறை செயலிழந்து நிற்கிறது என கூறினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 hour ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

3 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

3 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

4 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

4 hours ago

This website uses cookies.