கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினர்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி, பள்ளியின் மாடியில் இருந்து குதித்து மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளி சூறையாடப்பட்டது. மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி, அவரது பெற்றோர்கள் சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த மாணவியின் பெற்றோர், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குறுகிய காலத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, குற்றவாளிகள் தப்பிக்கப்படாமல் தண்டனை பெற்று தர வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். இதனை முதலமைச்சர்களும் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் சென்னை கமலாலயத்தில் நேற்று அண்ணாமலையை சந்தித்து பேசினர். அப்போது, ‘மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க தேவையான அனைத்து சட்ட உதவிகளையும்செய்ய பா.ஜ.க, துணை நிற்கும் என அண்ணாமலை உறுதி அளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.