மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது :- முழுநேர அரசியல்வாதி யாரும் கிடையாது. முழு அரசியல்வாதி என்பது ஏதும் இல்லை ; முழு நேர அப்பனும் இல்லை, முழுநேர மகனும் இல்லை. நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல.. சோகத்தில் வந்தவன்.
இந்த ம.நீ.ம. கொடி, இங்கு வழங்கப்படும் உணவு, இந்த மேடை எல்லாம் என் சம்பாத்தியத்தில் வந்தது. நான் திமிராக பேசுகிறேன் என்று சொல்லுவார்கள். இந்த திமிர் பெரியாரிடம் இருந்து வந்தது. என்னை அரசியலில் இருந்து போக வைக்க முடியாது. நமக்கு தேசம் தான் மிக முக்கியம் ; கட்சியின் கொள்கைகளை பிறகு பார்த்துக் கொள்ளாலாம்.
விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்த 10% கூட மத்திய அரசு செய்யவில்லை. தேசத்தின் குடியுரிமை ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. ஓட்டுக்காக பணம் வாங்குவதை நிறுத்தினால் ஏழ்மை முடியும். கோவை தெற்கில் நான் தோல்வியடைய காரணம் 90,000 பேர் வாக்களிக்கவில்லை.
தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். எல்லா கட்சியும் ஒன்று சேர்ந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும், என்று கூறினார்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.