காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது.கவுன்சிலர்கள் வாக்கெடுப்பின் மூலம் திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி மேயராக பதவியேற்றார். துணை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருபர் பொறுப்பேற்றார்.கடந்த 2 ஆண்டுகளாக மேயர் மகாலட்சுமிக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களுக்கும் மோதல் இருந்து வந்தது.
இந்த மோதல் பிரச்சினையால் மேயர் மகாலட்சுமி மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் மேயருக்கு எதிரான திமுக கவுன்சிலர்கள் 22 பேர் தங்கள் குடும்பத்தினருடன் தனி பேருந்தில் சுற்றுலா புறப்பட்டனர். இதனால் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு கூட்டத்தில், இவர்கள் கலந்து கொள்வார்களா என சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் மேயருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் 10 பேரும் அவர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் திமுகவில் 33 பேரும், விசிக, காங்கிரஸில் தலா ஒரு கவுன்சிலர் என ஆளுங்கட்சி தரப்பில் 35 பேர் உள்ளனர். இதில் மேயருக்கு எதிராக திமுக 17, அதிமுக 8, பாமக 2, சுயேட்சை 4, பாஜக, தமாகா என மொத்தம் 33 பேர் உள்ளனர்.எனவே நாளை நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.