கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகேபக்கத்துவீட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உடலை சிதைத்த பொறியியல் பட்டதாரி நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே சாரூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான கமலதாஸ் என்பவரது மனைவி லைலா (47). இவரது அடுத்த வீட்டில் வசிப்பவர் பொறியியல் பட்டதாரியான எட்வின். இவர் ஏற்கனவே லைலாவிற்கு பலமுறை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க முயன்றதாக தெரிகிறது.
இதுகுறித்து லைலா எட்வினின் தாய் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுடன் முறையிட்டு எட்வினை அவர்கள் கண்டித்தனர். இதனால் எட்வின் லைலாவின் மீது ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி லைலா உறவினர் ஒருவரின் புதுமனைபுகுவிழாவிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து தனிமையில் படுத்திருக்கும்போது, எட்வின் வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து லைலாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு லைலா கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அவர், லைலாவை சரமாரியாக தாக்கி கழுத்தை மிதித்துள்ளார்.
இதில், மயக்கமடைந்த லைலாவை பாலியல் பலாத்காரம் செய்த எட்வின், லைலா படுகாயங்களுடன் இருப்பதாக உறுவினர்கள் தெரிவித்ததை, தனக்கு தெரியாதவன் போல் நடித்து உறுவினர்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். மேலும், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும் உறுவினருடன் சென்றுள்ளார்.
தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தை நடத்தியது எட்வின்தான் செய்துள்ளார் என தெரியவந்ததையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற லைலா நாகர்கோவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்கத்து வீட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.