கரூர் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் கரூர் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில், அனைத்து அரசியல் கட்சிகளும், பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை நடத்தியது.
அப்போது, இந்த முறை காங்கிரசுக்கு கரூர் தொகுதியை வழங்கக் கூடாது என்றும், திமுக போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கியதால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்ததாக திமுக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர்.
கடைசியாக, யாருக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்தாலும், ஒற்றுமையாக பணியாற்றி இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவுரை வழங்கியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.