கரூர் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் கரூர் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில், அனைத்து அரசியல் கட்சிகளும், பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை நடத்தியது.
அப்போது, இந்த முறை காங்கிரசுக்கு கரூர் தொகுதியை வழங்கக் கூடாது என்றும், திமுக போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கியதால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்ததாக திமுக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர்.
கடைசியாக, யாருக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்தாலும், ஒற்றுமையாக பணியாற்றி இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவுரை வழங்கியது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.