கரூர் ; மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நள்ளிரவு வரை சோதனை நடைபெற்றது.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் நேற்று காலை 7:00 மணி முதல் வருமான வரித்துறையினார் சோதனை நடத்துவதற்காக கரூரின் பல்வேறு பகுதிகளுக்கு குழுக்களாக பிரிந்து சென்றனர். கரூர் நகர பகுதி கோவை சாலை ராயனூர், மண்மங்கலம், காந்திகிராமம் போன்ற பல பகுதிகளில் சோதனை இடுவதற்காக வருமான வரித்துறையினர் சென்றனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லம் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனைக்காக வருமான வரித்துறையினர் வந்தனர். இந்த தகவல் கேள்விப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சம்பவ இடத்திற்கு வந்து,சோதனை நடத்த வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வருமானவரித்துறை அலுவலர்கள் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், வருமான வரித்துறை அலுவலர் காயத்ரி, திமுக நிர்வாகிகளால் சிறை பிடிக்கப்பட்டார்.
தொடர்ந்து, பதட்டமான சூழ்நிலை நிலவியதால், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருமான வரித்துறை சென்றனர். வருமான வரித் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து, நான்கு அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் மாலையில் சோதனை சொய்வதற்காக போலீசார் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். சோதனை நடக்க இருந்த கொங்கு மெஸ் மணி, துணை மேயர் தாரணி சரவணன், பால விநாயகர் பூளு மெட்டல்ஸ் உரிமையாளர் தங்கராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து உள்ளதால் அவர்களின் வீடுகளில் சோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருமான வரித்துறை திரும்பி சென்றனர்.
ஆனால் ஒரு இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடைபெற்று வருகிறது. காந்திகிராம் பகுதியில் உள்ள பிரேம் குமார் இல்லம், பால விநாயகர் ப்ளூ மெட்டல்ஸ் சொந்தமான சின்னாடாங் கோவில் பகுதில் உள்ள இடங்களில் சோதனை, க.பரமத்தி பகுதியில் உள்ள கிரஷர் உள்ளிட்ட இடங்களிள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். சுமார் 150 மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் வருமான வரித்துறையினர் சோதனை செய்ய இருக்கும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட கரூருக்கு வருகை புரிந்துள்ளனர்.
நள்ளிரவில் முடித்துவிட்டு ஓய்வுக்கு சென்றுள்ள ஐடி அதிகாரிகள், மீண்டும் சோதனை நடைபெறும் இடங்களில் சிஆர்பிஐ போலீசார் மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்பணியில் இருந்து வருகின்றனர். தொடர்ந்து மீண்டும் இரண்டாவது நாளாக இன்று பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்பது தெரிய வருகிறது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.