கடவுளின் தேசம் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் கேரளா நம் அண்டை மாநிலமாக உள்ளது. இயற்கை எழில் மிகுந்து காணப்படும் கேரளாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் சுற்றுலா சென்று வருகின்றனர்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டகை, மேட்டுப்பட்டி, சூரல்மலை உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில் ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர்.
எஸ்டேட்கள் உள்ள இந்த இடங்களில் பொதுமக்கள் தங்கி பணியாற்றி வந்தனர். நள்ளிரவு 1 மணிக்கு தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மண்கள் சரிந்து வீடுகள் மீது விழுந்த நிலையில் காட்டாற்று வெள்ளமும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சீறிப்பாய்ந்தது. இந்த நிலச்சரிவில் 1000க்கும் அதிகமானவர்கள் சிக்கி உள்ளனர். அதாவது சுமார் 500 வீடுகளில் வசித்து வந்தவர்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். இதையடுத்து ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியை தொடங்கி உள்ளனர். மீட்பு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது கேரளா நிலச்சரிவில் சிக்கி – பலியானவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக உடல்கள் 138 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்டு உடல் பாகங்கள் நிலம்பூரில் மீட்கப்பட்டுள்ளது.இந்த பெருந்துயரம் மக்கள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.