கோடநாடு கொலை வழக்கு… எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான உத்தரவு : உயர்நீதிமன்றம் அதிரடி!!
கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி நேரில் சாட்சியம் அளிக்க இயலாததால் வீட்டில் சாட்சியம் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரியும் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இதுபோன்று, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக்கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் கோடநாடு வழக்கில் எடப்பாடி பழநிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு சமீபத்தில் இடைக்கால தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேரில் சாட்சியம் அளிக்க விலக்கு அளித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியம் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் கார்த்திகைபாலன் நியமனம் செய்யப்பட்டார். மேலும், சாட்சியப் பதிவை ஒரு மாதத்தில் வழக்கறிஞர் ஆணையர் முடிக்க வேண்டும் என்றும் வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.