கோவை சிங்காநல்லூர் பகுதியில் இயங்கி வரும் கே.எஸ்.ஜி அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப்
மெடிசன் என்ற நிறுவனம் மாணவர்களை நீட் தேர்வு இல்லாமலேயே மருத்துவ படிப்பில் சேர்ப்பதாக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்கள் எனவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணம் கொடுத்த மாணவர்களின் சார்பில் வழக்கறிஞர் ஜான்லி என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.
நீட் இல்லாமல் மருத்துவ படிப்பில் சேர இங்கு மூன்று ஆண்டுகளும், அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளும் பயிற்சி அளிக்கபடும் எனக்கூறி 40 முதல் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் இந்த நிறுவனம் ஏமாற்றி பணம் பெற்றுள்ளது என தெரிவித்தார்.
இதுகுறித்து ஏற்கனவே 2021-ம் ஆண்டு ஓய்வு பெற்ற துணை ஆய்வாளர் நடராஜன் புகார் அளித்துள்ளார்.இதுதொடர்பாக கோவை மாநகர குற்றவியல் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளோம் என சொன்னார்.
குறிப்பாக கிராமப்புற மாணவர்களை குறி வைத்து ஏமாற்றி மாணவர்களிடம் இருந்து 50 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி உள்ளதாகவும் இதில் ஆரம்பத்தில் 5 முதல் 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது ஆசையை தூண்டும் விதமாக விளம்பரம் செய்து கவர்ந்துள்ளனர் மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சீட்டு வாங்கித் தருவதாக கடந்த ஐந்தாண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளனர் என புகார் அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.