பாஜக தலைவர் அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்றும், அவருக்கு நாவடக்கம் தேவை என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி காட்டமாக தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு பகுதியில் அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கேபி முனுசாமி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளரிடம் அவர் பேசியதாவது :- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை எவ்வித வரலாறும் தெரியாமல் பேசி வருகிறார். அவருக்கு நாவடக்கம் தேவை என காட்டமாக பேசினார்.
ஓ.பன்னீர் செல்வம் குறித்து பேசிய அவர், அரசியலில் அவர் காணாமல் போனவர். அவர் குறித்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றும், ஒருவேளை அவர் மன்னிப்பு கடிதம் வழங்கும் பட்சத்தில் அந்த நேரத்தில் தலைமை அதனை பரிசீலனை செய்யும் என தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவர் பேசியதாவது:- தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு விலக்கு கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறுவதாகவும், அதற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்பது பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்பதும், இது அரசியலில் அவருக்கு அனுபவம் இல்லாத தன்மை மற்றும் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுவதை சுட்டிக் காட்டுகிறது என தெரிவித்தார்.
தமிழகத்தில் சமூக விரோத செயல்களுக்கு அடிப்படையாக உள்ள கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளதால் குற்ற செயல்கள் அதிகரிப்பதோடு, சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.