ஜூலை 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் முன்பு பெண்களை முன்வைத்து மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் இயங்கி வரும் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூலம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநரிடம் கடந்த மாதம் புகார் மனு அளித்துள்ளோம். அதைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக இயங்கி வரும் பார்கள் தற்போது அதிக அளவு மூடப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசு 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு போலியானது. இதில் ஏற்கனவே மூடப்பட்ட சில கடைகளின் பெயர் இருக்கிறது. பள்ளிகள், கோயில்கள் அருகே உள்ள கடைகளும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சில கடைகளும், வருவாய் குறைந்த சில கடைகளும் தான் மூடப்படுகிறது.
தற்போது சில டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் வாங்குவது குறைந்திருக்கிறது. ஆனால், டாஸ்மாக் ஊழியர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இதனை எல்லாம் அரசு கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கவில்லை என்றால் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு எதிராகவும், நான் போராட தயாராக இருக்கிறேன்.
சில டாஸ்மாக் கடைகள் மூலம் மொத்தமாக மது கொள்முதல் செய்யப்படுகிறது. மனம் மகிழ் மன்றங்கள் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதனை அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த முயற்சியினை அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். அதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வரும் ஜூலை மாதம் 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று பெண்களை வைத்து மது கடைகளுக்கு முன்பு மது பாட்டில் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
டாஸ்மாக் கடைகளின் ஒரு லட்சம் கோடி முறைகேடு தொடர்பாக ஆவணங்கள் ஆளுநர் கொடுத்திருக்கிறோம். அதன்மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணை வேண்டுமென கூறி இருக்கிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
சினிமா படத்தில் சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும். மாமன்னன் படத்தைப் பார்த்துவிட்டு, அதில் விமர்சனங்கள் இருந்தால் குறிப்பிடுவேன். தற்போது எந்த சினிமா படத்தையும் விமர்சனங்கள் வைக்க தேவையில்லை.
தமிழகத்தில் பூரண விலக்கு அமல்படுத்துவது எனது முக்கிய கொள்கையாக உள்ளது. தற்போது அதைச் சார்ந்த சந்திப்புகளை நடத்தியிருக்கிறோம், என அவர் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.