குமரி ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு.? குறி வைத்த திமுக : முன்னாள் அமைச்சர்கள் இடையே போட்டா போட்டி!!

தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் ஜூன் 10ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் தி.மு.கவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார் அதிமுகவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோரின் ராஜ்யசபா எம்.பி பதவி காலம் அடுத்த மாதம் முடிகிறது .

இதனால் ராஜ்யசபா எம்.பி சீட்டை பெறுவதற்கு தி.மு.க வின் முக்கிய புள்ளிகளுக்கிடையே கடுமையான போட்டா போட்டி எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் இருந்த விஜயகுமாரின் எம்பி பதவிக்காலம் முடிவடைவதால், கன்னியாகுமரி மாவட்டத்திற்கே அந்த ராஜ்யசபா எம்பி சீட் கிடைக்கும் என உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .

அதன்படி, இந்த ராஜ்யசபா எம்.பி சீட் குமரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டால் அது யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் முன்னாள் எம்.பி.,ஆஸ்டினும், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த இருவர் பெயரையும் தான் குமரி மாவட்ட அடிமட்ட திமுக தொண்டர்களும் டீக்கடையில் உச்சரித்து வருகின்றனர். ராஜ்யசபா எம். பி.,சீட் குமரி மாவட்டத்திற்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படுமா.?

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது குமரி மாவட்டத்தில் திமுக 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட ஆஸ்டின், நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ்ராஜன் ஆகியோர் தங்களது வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

இது திமுக தலைமைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது என்பதே கூறலாம். இந்த தோல்வியை சரிகட்டவே முதல்வரிடம் பெரிதளவில் இணக்கும் இல்லாமல் இருந்த எம்.எல்.ஏ., மனோ தங்கராஜ்க்கு அமைச்சர் பதவி கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது .

ஆனால் தற்போது அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மிக இணக்கமாக உள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின்னர் மாவட்டத்தை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார்.

கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், மேயர் மகேஷும் அவரின் கட்டுப்பாட்டிலேயே வழி நடந்து வருகிறார். குமரி மாவட்டத்தில் கோஷ்டி பூசல் நீங்கி, இந்த ஒற்றை தலைமை உருவாக ஓராண்டு ஆகியுள்ளது.

இச்சூழ்நிலையில் குமரி மாவட்டத்திற்கு ராஜ்யசபா எம்.பி.,சீட் கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று கூறலாம். ஏனெனில் எந்த அரசியல் கட்சியும் மாவட்டத்திற்குள் கோஷ்டி பூசல் ஏற்படுவதை விரும்புவதில்லை.

இந்த காரணத்திற்காகவே முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் குமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிகார வரம்பில் இருந்துவந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இப்படிப்பட்ட நிலையில் குமரி மாவட்டத்தில் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,சீட் வழங்கினால் மாவட்டத்தில் மேலும் ஒரு அதிகாரபலம் ஏற்பட்டு, கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் வலுக்கவே வாய்ப்புள்ளது என தெரிகிறது.

அதேபேல் சட்டமன்ற தேர்தலில் ஒருசில மாவட்டங்களில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றும் ,அங்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லாத நிலையும் இருந்து வருகிறது. எனவே அமைச்சர் பதவி இல்லாத மாவட்டத்திற்கே ராஜ்யசபா எம். பி.,சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.

இருப்பினும் குமரிமாவட்டத்தில் காலியாகும் இந்த ராஜ்யசபா எம்.பி.,சீட்டை பெற முன்னாள் எம். பி.,ஆஸ்டின் மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோரிடையே கடுமையாக முயற்சி நடந்துவருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!

ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…

6 hours ago

வாடகைக்கு ஆள் பிடித்து திமுக புகழை பாடச் சொன்னால் மட்டும் போதுமா? அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…

6 hours ago

வெற்றிமாறன் கையில் எடுக்கும் புது முயற்சி? இதான் ஃபர்ஸ்ட் டைம்! இது ரொம்ப புதுசா இருக்கே?

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…

7 hours ago

Welcome to Malayalam Cinema; சாய் அப்யங்கரை வாழ்த்தி வரவேற்ற லாலேட்டன்! தரமான சம்பவம்?

டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…

8 hours ago

அஜித் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளார் முதல்வர்.. இது அவருடைய பெருந்தன்மை : காங்., தலைவர் பேச்சு!

மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…

9 hours ago

பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த்? இயக்குனர் எடுத்த முடிவால் ஹீரோவே மாறிய சம்பவம்!

திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…

9 hours ago

This website uses cookies.