டிரெண்டிங்

எல்.முருகன் அருந்ததியர் இல்ல.. ஆர்.எஸ்.எஸ் சங்கி : திருமாவளவன் பகீர் விளக்கம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், மகாராஷ்டரா மாநில சட்ட மன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ராட்ஷ்ரிய ஜனதா தளம் கட்சியும் கூட்டணியாக தலா 10 தொகுதிகள் வீதம் 20 தொகுதிகளில் போட்டியிடகின்றன.

எஞ்சி உள்ள தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இந்தியா கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி அனுகினால் போட்டியிடும் இடங்களில் மறு பரிசிலனை செய்யப்படும்.

இந்தியா கூட்டணி வெற்றியை பாதிக்க செய்யும் நோக்கம் கிடையாது. தேர்தலில் போட்டியிடுவது என்று ஏற்கனவே முடிவு செய்து விட்ட நிலையில் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்று விளக்கம் தந்தார்கள். மும்பை மானகரம் தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பாய் உள்ள பகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்பதை மும்பையில் உறுதிப்படுத்தி இருக்கிறோம்.

எல்.முருகன் அருந்ததியர் என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லி தான் அருந்ததியர் சமூகத்திற்கே தெரியவந்தது. அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். அருந்ததியர் என காட்டி கொண்டதில்லை. அருந்ததியர் இயக்கங்களுடன் பங்கேற்றதில்லை. அருந்ததியர்களுக்காக எந்த இடத்திலும் போராடியதில்லை. குரல் கொடுத்ததில்லை. அவர் படிக்கும் காலத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தார்.

பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். தான் அருந்ததியர் என அடையாளம் காட்டியது. அருந்த்தியர் இடஒதுக்கீட்டான எந்த போரட்டத்திலும் பங்கேற்றதில்லை. குரல் கொடுத்து வாதாடியதில்லை. போராடிய இயக்கங்களுடன் நின்றதில்லை.

தமிழ் நாட்டில் உள்ள அருந்த்தியர்களும் எல்.முருகனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடக்க காலத்தில் இருந்து அருந்ததியர் சமுதாய இடஒதுக்கீட்டிற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. அருந்ததியர் இயக்கங்கள் நடத்திய போராட்டங்களிலும் மாநாட்டுகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்று உள்ளது.

அருந்தியர் இடஒதுக்கீடு தொடர்பாக கருணானிதி பேசியே கட்சியே விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். இந்த கட்சியால் தான் அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடே கிடைத்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அருந்ததியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று பொறாமை கொண்ட சில உதிரிகள் கட்சியில் உள்ளவர்கள் வெளியேற்ற தொடர்ந்து அவதூறுகளை பரப்புக்கின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்த வழக்கு அருந்ததியர் உள் இடஒதுக்கீடு எதிர்த்து அல்ல. அவதூறு பரப்புவது அநாரீகமான அரசியல். உள் ஒதுக்கீட்டை எதிர்த்து பேசிகிறவர்களை பற்றி விமர்சிப்பது இல்லை.

அருந்ததியர்களை ஆதரித்த ஒரே தலித் அமைப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சொல்லி தருகின்ற படி விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது அவதூறு பரப்புகின்றனர்.

இதையும் படியுங்க: மனைவியுடன் உடலுறவு வைத்த முதலாளி.. ரகசிய வீடியோ எடுத்த தொழிலாளர்கள் : அலற விட்ட அந்தரங்கம்!

அம்பேத்கார் கண்ட கனவுக்கு எதிராக இருக்கிறதால் இந்தியா முழுவதும் மானில அரசுகள் தலீத்களை விருப்பம் போல் கூறு போடுவது போல் இருக்கிறது.

அரியானாவில் ஆட்சிக்கு வந்ததும் பா.ஜ.க. அரசு செய்கிற முதல் வேலையே சப்- கேட்ட்ஜெக்ரிஷன். எந்த காலத்திலும் தலீத்கள் ஒன்று சேர முடியாத வாய்ப்பு இந்த சப்- கேட்ட்ஜெக்ரிஷன் முலம் ஆகும்.

சட்டம் வகுக்கும் போதே தலித்தகள், பழங்குடியினர் தொடர்பாக நிலைபாடு கொண்டு வர வேண்டும் என்றால் மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் விவாதித்து நிறைவேற்றிய பின்னர் தான் குடியரசு தலைவர் ஒப்பதல் அளிக்க வேண்டும் என்று அம்பேத்கார் கொண்டு வந்து உள்ளார்.

இந்தியா முழுவதும் தலீத்கள், அதிவாசிகள் ஒன்றுப்பட்டு இருந்தால் மட்டும் தான் எதிர்காலத்தில் தற்காத்து கொள்ள முடியும்.

இதை அடித்து நொறுக்கி தகர்க்கிற பணியை தான் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கும்பல் ஈடுப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் சப்- கோட்டாவை ஆதரித்தோம். ஆனால் சப்- கேட்ட்ஜெக்ரிஷன் என்ற பெயரில் தனி கோட்டாவை வழிவகைக்கிறதை எதிர்க்கிறோம்.

பொருளாதார அளவு கோல்லை எதிர்க்கிறோம். தாக்கல் செய்த மனு என்பது ரிவ்யூ பெட்டிசன். தீர்ப்பை தந்த நீதிபதிகளை மறு ஆய்வு செய்ய சொல்கிறோம். தீர்ப்பை மாற்றி எழுத வாய்ப்பு இல்லை. ஆனால் சந்தேகங்கள் களைய வேண்டும்.

எதிர்ப்பை பதிவு செய்ய வழக்கை தொடர்ந்தோம். அருந்ததியர்களுக்கு எதிரானது இல்லை. எல்.முருகன் ஆர்.எஸ்.எஸ். சங்கி. அவர் அருந்ததியர் அல்ல கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.