பெண் மருத்துவர் கொடூரக் கொலை: முக்கிய ஆதாரமான ப்ளூடூத் இயர் போன்: தட்டித் தூக்கிய போலீஸ்….!!

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, முதுநிலை மருத்துவ படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த 9ம் தேதி, கருத்தரங்கு வளாகத்தில் மர்மமான முறையில் அரை நிர்வாணக் கோலத்தில் இறந்து கிடந்தார்.

பிரேத பரிசோதனையில், கொலை செய்யப்படுவதற்கு முன், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இது குறித்து விசாரித்த போலீசார், குற்றவாளி சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில், பெண் பயிற்சி டாக்டர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராயை பிடிப்பதில், அவரது, புளூடூத் இயர்போன் கருவி முக்கிய ஆதாரமாக இருந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து போலீசார் கூறும் போது பெண் பயிற்சி டாக்டரின் உடலை கைப்பற்றிய பின், கல்லூரி முழுதும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை குழுவாக ஆய்வு செய்தோம். அதிகாலை 4:00 மணி அளவில், சஞ்சய் ராய் கல்லூரிக்குள் நுழைந்துள்ளார்.ஆனால் வெளியே வந்த போது, அவரிடம் புளூடூத் இயர்போன் இல்லை.

குற்றம் நடந்த இடத்தில், உடைந்த நிலையில், புளூடூத் இயர்போன் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இது சஞ்சய் ராய்க்கு சொந்தமானது என தெரியவந்தது.

தன் மீதான குற்றச்சாட்டை முதலில் மறுத்த அவர், பின் ஒப்புக் கொண்டார். அவரது மொபைல் போனில் ஆபாச படங்கள் ஏராளமாக இருந்தன. மேலும், அவர் மீது பாலியல் சீண்டல் புகார்களும் ஏற்கனவே உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயிற்சி மருத்துவர் கொலையில் நேர்மையாக விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரக் கோரி டில்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டில்லியில் வெளி நோயாளிகள் பிரிவு, ஆப்பரேஷன் தியேட்டர் ஆகியவற்றில் பணியாற்றும் டாக்டர்கள், பணியை கைவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த விவகாரத்தில், 48 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மருத்துவர் சங்கமும் அறிவித்துள்ளது.

இதில் மவுனம் கலைத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என நேற்று முன்தினம் உறுதி அளித்தார்.

Sudha

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

10 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

12 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

12 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

13 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

14 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

14 hours ago

This website uses cookies.