சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நகைக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சிவகுமார். இவரின் கடைக்கு கடந்த 10ம் தேதி நுங்கம்பாக்கம் காவல் துறையினர் எனக்கூறி வந்த இருவர், திருட்டு வழக்கில் நேபாள பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உங்கள் கடையில் வாங்கப்பட்டது என கூறியுள்ளார்.
நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவலர் எனக்கூறிய அவர்கள், 2 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டுள்ளனர். அப்படி தராவிட்டால் முதல் தகவல் அறிக்கையில் கடையின் பெயரை சேர்த்து களங்கம் ஏற்படுத்துவோம் என கூறி மிரட்டி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் குற்றப்பிரிவு காவலர்கள் மெல்வின் மற்றும் தங்கராஜ் ஆகிய 2 காவலர்களிடம் விசாரணை நடத்தியதோடு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். மேலும், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணியிடம் விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து அவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.