மயிலாடுதுறை ; சீர்காழி அருகே இடத்தகராறில் வேலிக்கு தீவைத்து, குடியிருப்புவாசியை திமுக ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த அன்புமணி. இவரது கணவரும், முன்னாள் திமுக ஊராட்சிமன்ற தலைவருமான மணிமாறனும், அவரது மகன்களும், பிரகலாதன் என்பவரின் இடத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மணிமாறனும், அவரது மகன்களும் சேர்ந்து பிரகலாதனின் இடத்தை சுற்றியுள்ள வேலியை தீவைத்து கொளுத்தினர். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, பிரகலாதனை கட்டையால் ஓடஓட விரட்டி அடித்துள்ளார் மணிமாறன். இதில், பலத்த காயமடைந்த அவர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரின் இந்த அட்டகாசம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.