மயிலாடுதுறை ; சீர்காழி அருகே இடத்தகராறில் வேலிக்கு தீவைத்து, குடியிருப்புவாசியை திமுக ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த அன்புமணி. இவரது கணவரும், முன்னாள் திமுக ஊராட்சிமன்ற தலைவருமான மணிமாறனும், அவரது மகன்களும், பிரகலாதன் என்பவரின் இடத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மணிமாறனும், அவரது மகன்களும் சேர்ந்து பிரகலாதனின் இடத்தை சுற்றியுள்ள வேலியை தீவைத்து கொளுத்தினர். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, பிரகலாதனை கட்டையால் ஓடஓட விரட்டி அடித்துள்ளார் மணிமாறன். இதில், பலத்த காயமடைந்த அவர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரின் இந்த அட்டகாசம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.