திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அதோடு, அதிகாலை 4 மணி மற்றும் 7 காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான லியோ திரைப்படத்தை ரசிகர்கள் ஆராவாரத்துடன் வரவேற்றனர். தியேட்டர்களில் திருவிழா கோலம் பூண்டது. படம் வெளியாவதற்கு முன்பே முதல் நாளில் வசூல் சாதனை படைக்கப்போவதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில், லியோ திரைப்படம் ரூ.148.5 கோடியை வசூலித்து இந்திய சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய இந்திய திரைப்படம் என்ற சாதனை படைத்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, ரஜினிகாந்த்தின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் உள்ளிட்ட படங்களின் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
முதல் நாளே ரூ. 140 கோடி வசூல் என்பது விஜய் மற்றும் லோகேஷ் கனராஜுக்கு இதுவே முதல் முறையாகும். லியோ படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 30 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, விஜய்யின் கோட்டையான கேரளாவில் ரூ. 11 கோடியும், கர்நாடகாவில் ரூ. 14 கோடியும், ஆந்திரா, தெலுங்கானாவில் ரூ. 15 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.