ஓபிஎஸ் கடிதத்தை நிராகரித்த இபிஎஸ்..? உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலைக்கு சிக்கல்.. உடனே அதிரடி முடிவை எடுத்த அதிமுகவினர்..!!

தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்று கட்சியின் 90 சதவீத நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 2,400க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்தையும் கொடுத்துள்ளனர்.

ஆனால், ஒற்றை தலைமை ஆகாது என்றும், அதிமுகவுக்கு இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்காக, எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்திடமும் மனுக்களை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான FORM A மற்றும் B படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்து இடாததால், அவர்களுக்கு அதிமுக சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், அதிமுக வேட்பாளர்களுக்கான படிவங்களில் இன்று மாலை 3 மணிக்குள் இருவரும் கையெழுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் தலைதூக்கியுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதேவேளையில், உள்ளாட்சி தேர்தலையும் விட முடியாத நிலையில், சுயேட்சையாக போட்டியிட அதிமுகவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால், மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

பொள்ளாச்சி தீர்ப்பு ஓகே… அப்படியே பல்கலை., பாலியல் விவகாரத்திலும் நடவடிக்கை எடுங்க : அண்ணாமலை அதிரடி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…

3 minutes ago

எப்ப பார்த்தாலும் நித்யா மேனனை த***ட்டே இருப்பான் : இயக்குநரை ஒருமையில் விளாசிய பிரபலம்!

பிரபல பத்திரிகையாளர் கூறிய கருத்துக்கள் கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக அவன், இவன் என ஒருமையில் இயக்குநரை சரமாரியாக விமர்சித்துள்ளார்.…

58 minutes ago

விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் சினிமாவை…

2 hours ago

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் : பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு குறித்து விஜய் கருத்து!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…

3 hours ago

சாகும் வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி அதிரடி!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு என்ற அறிவிப்பை நாடே உற்று நோக்கியது. கடந்த 2019ஆம் ஆண்டு…

3 hours ago

ரவி மோகனுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக்கூடாது.. பாடகி கெனிஷா உருக்கம்!

நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். பின்னர் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார்.…

5 hours ago

This website uses cookies.