மக்களிடம் இரசாயன மாற்றம்… நகர்ப்புற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் : எச்.ராஜா நம்பிக்கை!!

Author: Babu Lakshmanan
19 February 2022, 6:27 pm
Quick Share

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்தது. மக்கள் அனைவரும் ஆர்வமாக வாக்களித்தனர். அதேபோல, திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வாக்களித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது :- தமிழ்நாடு அரசு பணம் இல்லாமல் திவாலாகியுள்ளது. திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவி நிறத்தில் முகக்கவசம் அணிந்து வருபவர்களை தேர்தல் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.
இது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறை உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் வாக்களிக்கும் மக்களிடம் ஒரு ரசாயன
மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் பாஜகவிற்கு பெரும்பான்மையான இடம் கிடைக்கும், எனக் கூறினார்.

Views: - 833

0

0