கேஎஸ் அழகிரிக்கு பதில் இனி இவருதான் தமிழக காங்., தலைவர் : எம்.பி. திருநாவுக்கரசர் சூசகம்!!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தி எதிரான வழக்கில் தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

தீர்ப்பின் நகல் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து விட்டது. பாராளுமன்ற செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற தலைவருக்கும் இந்த தீர்ப்பு கிடைத்திருக்கும்.

எனவே நடந்து கொண்டுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி கண்டிப்பாக பங்கேற்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பில் மறைமுகமாக ராகுல் காந்தியை பழி வாங்கும் நோக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்ணாமலை பாத யாத்திரை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணாமலை தலைமையில் தற்போது நடந்து கொண்டிருப்பது பாதயாத்திரை அல்ல, அது ஒரு கார் யாத்திரை. ஒவ்வொரு தொகுதிகளையும் அந்த தொகுதி எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை திட்டுகின்ற வேலையை தான் அண்ணாமலை செய்கிறார் திட்டும் யாத்திரையாக இது உள்ளது. இதனால் தமிழகத்தில் எந்த விதமான தாக்கமும் ஏற்படாது. இது ஒரு தோல்வி யாத்திரை என திருநாவுகரசர் விமர்சித்தார்.

அண்ணாமலை அரசியல் கற்றுக் கொள்ளவில்லை இனியாவது அரசியல் கற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் நடந்து செல்லும் போது கூட்டம் கூடவில்லை ஓடுகின்ற கூட்டத்தையும் காசு கொடுத்து கூட்டி வருகின்றனர்.

அதிமுகவிலிருந்து பலத்த எதிர்ப்பு வந்தவுடன் அண்ணாமலை அதிமுக குறித்த விமர்சனங்களை சமீபத்தில் தவிர்த்து வருகிறார் அதிமுக பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி.

டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவரை மாற்றுவதற்கு எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மாநில தலைவர் மாற்றம் குறித்து காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்து அறிவிக்கும் என திருநாவுகரசர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.