சேலம் : சேலத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 678 கிலோ சந்தன பவுடரை பயன்படுத்தி 10,008 சந்தன சிவலிங்கங்கள் உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது.
சிவபெருமானுக்கு உகந்த நாளான மாசி மாதத்தில் அமாவாசை முதல் நாளன்று வரக்கூடிய ராத்திரி மகா சிவராத்திரி. இந்த நாளில் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் இரவு நேரத்தில் செய்யப்பட்டு பக்தர்கள் கண்விழித்து விரதம் மேற்கொண்டால், சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனடிப்படையில் உலகம் முழுவதும் மகா சிவராத்திரியை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்திலும் அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி பூஜை வெகு விமர்சையாக நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவில் வாசவி கிளப் சேலம் ஸ்மார்ட் பாய்ஸ் மற்றும் பொன்னம்மாபேட்டை ஆரிய சமாஜம் இணைந்து மகா சிவராத்திரி வைபவம் கொண்டாடப்பட்டது. தூய்மையான 678 கிலோ சந்தன பவுடரை கொண்டு பத்தாயிரத்து எட்டு சிவலிங்கங்கள் தயாரிக்கப்பட்டு, பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்ற எழுத்தின் வடிவில்10,008 சிவலிங்கங்களை வைக்கும்போது, ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என கூறி சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டு வடிவமைத்தனர்.
தொடர்ந்து, சிவாச்சாரியார் 10008 சிவலிங்கத்திற்கும், சிவனுக்கும் லட்சார்ச்சனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களை எழுப்பினர். இதுவரை சந்தனத்தால் லிங்கங்கள் செய்யாத நிலையில், இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு 10008 சந்தன லிங்கங்கள் அமைக்கப்பட்டது விருக்க்ஷா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் உலக சாதனையில் 10008 சந்தன லிங்கங்கள் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் குமரேசன் கூறும்போது, உலக அமைதிக்காகவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், இதுவரை யாரும் செய்யாத அளவில் தூய்மையான சந்தனப் பவுடரை 10008 சந்தன லிங்கம் தயாரித்து வடிவமைக்கப்பட்டது. அதற்கு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் இதனை மக்கள் இல்லங்களில் வைத்து வழிபட தொடர்ந்து மூன்று நாட்கள் பூஜை செய்யப்பட்டு மூன்றாம் நாள் பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தன லிங்கங்கள் வழங்கப்படும், என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.