சீக்கிரமா உதயநிதியை அமைச்சராக்குங்க… இந்த வாரிசால் அந்த ‘வாரிசு’க்கு சிக்கல் : மேடையில் போட்டுடைத்த அண்ணாமலை!!

பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாக முடியாத நிலை – பொங்கலுக்கு அதை பார்க்கதான் போறிங்க என விஜய் வாரிசு திரைப்படம் குறித்து கோவில்பட்டியில் பேசிய அண்ணாமலை சூசக பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் மாற்றத்திற்கான மாநாடு நேஷனல் பொறியியல் கல்லூரி எதிரே உள்ள மைதனாத்தில் நடைபெற்றது.

கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி விழாவில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், தூத்துக்குடி மண் வீரம் விளைந்த மண், சுதந்திர போராட்ட வீரர்கள் நிறைந்த மண், கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா. பிறந்த மண் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட மாவட்டம்.

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராவின் கதைகளில் 2 கதைகளை தினமும் எனது குழந்தைகளுக்கு கூறி வருகிறேன்.தேர்தல் வர 17 மாதங்கள் உள்ளது. 400 இடங்களை பெற்று மீண்டும் மோடி பிரதமராக வருவார்.

தமிழக அரசின் செயல்பாட்டில் கேளாறு உள்ளது. தமிழகத்தில் நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு, திமுக அரசுக்கு நிர்வாக கோளாறு, மொத்தமாக அறிவாலய அரசு கோளாறு தான்.எங்கு பார்த்தாலும் பிரச்சினை தான், அதனை தீர்க்க வேண்டிய இடத்தில் இருக்கும் முதல்வர், அதை தீர்ப்பது போன்று தெரியவில்லை.

தமிழக முதல்வர் இன்றைக்கு அடிக்கடி பேசுக்கூடிய வார்த்தை திராவிட மாடல். இது வரை யாரூம் திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கவில்லை, தூங்குவது முதல் காலை எழுவது வரை திராவிட மாடல் என்று கூறி வருகிறார்.

திராவிட மாடல் அரசில் முக்கிய அம்சமாக இருப்பது டார்க்கெட் வைத்து கல்லா கெட்டும் அமைச்சர். தமிழகத்தினை சாரயம் ஓடும் மாநிலமாக மாற்றி, எங்கு பார்த்தாலும் குடி,குடி என்று சொல்லி பெண்கள் இந்த மாநிலத்தினை வெறுக்கும் அளவிற்கு தமிழகம் குடியில் மூழ்கி இருக்கிறது.

டாஸ்மாக்கில் 38 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆண்டுகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து வருகிறது. எங்கே பார்த்தாலும் லஞ்சம், லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் செய்ய முடியதா நிலை தான் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

திமுகவின் மேடையில் அமைச்சர்கள் பேசுவதை பார்க்கும் போது அங்கு சமூக நீதி இல்லை, திமுக மேடையில் மட்டும் தான் சாதி பெயரை சொல்லி அழைக்கும் நிலை உள்ளது.

பெண்களுக்கு இலவசமாக மகளிர் பேருந்து பயணம் செய்யும் திட்டத்தில் பெண்கள் 888 ரூபாய் சேமிப்பதாக தெரிவித்துள்ளார்.

லிப்டிக் போட்ட மாதிரி வரும் இலவச பேருந்தினை மகளிர் பயன்படுத்துவதில்லை. ஆனால் இலவச பேருந்தினை பெண்கள் பயன்படுத்தவில்லை என்றும், பால் விலை , மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வினால் மகளிர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் இலவச பேருந்தில் பயணம் செய்தால் ஓசி பயணம் என்று அமைச்சர் ஒருவர் கூறுகிறார். 888 ரூபாய் மிஞ்சம் என்று சொல்லும் முதல்வர், பால் விலை , மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வினால் ஒவ்வொரு குடும்பம் ரூ3500 கப்பம் கட்டுவது கட்டுகின்றனர்.

வெள்ளைக்கார அரசு போல நீங்கள் இருக்கீறர்கள் மக்கள் கப்பம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். காரணம் ஜனநாயகம் என்பதற்காக என்றும், டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று தான் மகளிர் கேட்கின்றனர்.

நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களில் தமிழக அரசு ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் முதல் 80 ரூபாய் விவசாயிகளிடம் கமிஷன் வசூல் செய்கிறது.கப்பம் கட்டி தான் ஆக வேண்டிய சூழ்நிலையில் தமிழக விவசாயிகள் உள்ளனர்.

ஒரு பக்கம் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு பார்த்து,பார்த்து செய்கிறார். மறுபக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளிடம் இருந்து புடுங்கி கொண்டு இருக்கிறார்.

பால் விலை உயர்வு நல்ல காமெடி பாலுக்கு ஜி.எஸ்.டி. விதித்துள்ளதாக ஒரு வாய்கோளறு அமைச்சர் கூறுகிறார். மின்கட்டணம், சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று முதுகெலும்பு இல்லாத அரசு கூறுகிறது.

வடிவேலு கிணத்தை காணோம் என்பது போல அமைக்கப்பட்ட மரப்பாலத்தை காணும், 1, கோடியே 20 லட்சத்தை காணும்… அணி மட்டும் தான் உள்ளது..முதல்வரின் சொந்த தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு கால்பந்து வீராங்கனை ப்ரியா உயிரிழந்துள்ளார்.

பெண்களை அமைச்சர்களின் இருந்து காப்பாற்ற காவல்துறையில் சிறப்பு துறை அமைக்க வேண்டும், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றால் ஆக்கிவிடுங்கள்.

அதற்காக அவர் நடித்த படங்களை பார்க்க சொல்லாதீங்க என்றும், அங்கன்வாடி, பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய மூட்டை வழங்குவதில் சாதனை படைத்துள்ளார் அமைச்சர் கீதா ஜீவன் என்றும், கீதா ஜீவனுக்கு அழுகிய முட்டை அமைச்சர் என்று பெயர் வழங்கலாம் என்றும், சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கனிமொழி எம்பி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் தான் சமஸ்கிருதம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தமிழக்கு என்று எம்.ஜீ.ஆர் காலத்தில் தான் ஒரே ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக தமிழ் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு தொடங்கினால் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தருவது எங்கள் பொறுப்பு.

தமிழகத்தில் இன்றையக்கு திரைப்படம் எடுப்பது, நடிப்பது எல்லாம் அவர்கள் தான். பெரிய நடிகர்கள் திரைப்படம் வெளியிட முடியாத நிலை, அதை வரும் பொங்கலுக்கு பார்க்கத்தான் போகிறார்கள் என்றார்.

கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவ் சசிகலாபுஷ்பா, மாநில பொதுச்செயலாளர் பொன்பாலகணபதி, தூத்துக்குடி வடக்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணமாலை மாநாடு மேடைக்கு வரும் போதும், பேச்சினை முடித்தும், நடிகர் ரஜினிகாந்த நடிந்த பாட்ஷா படத்தில் இடம் பெற்ற பாட்ஷாபாரு என்ற பாடலும், அவர் கிளம்பும் போது அருணாச்சலம் படத்தில் இடம் பெற்ற சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடல் இடம் பெற்றது. குறிப்பிடதக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…

15 minutes ago

முருகர் மாநாட்டுக்கு மனித சங்கிலி நடத்தும் திருமாவளவன் ஏன் வேங்கைவயலுக்கு நடத்தவில்லை? தமிழிசை கேள்வி!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…

17 minutes ago

கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…

1 hour ago

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

2 hours ago

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த சிறுமி… தோளில் தூக்கிக் கொண்டு அலைந்த தாய் : கடலூரில் அதிர்ச்சி!

கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…

3 hours ago

இபிஎஸ் குறித்து மோசமான கார்ட்டூன்… திமுக ஐடி விங் மீது அதிமுக பரபரப்பு புகார்!

தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…

3 hours ago

This website uses cookies.