கர்நாடகா ; மங்களூரூ குண்டுவெடிப்பில் சம்பவத்திற்கு முன்னதாக, ஷாரிக்கின் நடமாடிய புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ம் தேதி ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. அதில், ஆட்டோவில் பயணித்த நபர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர். உடனே சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார், இதனை தீவிரவாத தாக்குதல் என அறிவித்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், காயமடைந்தவர் கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த முகமு ஷாரிக் (24) என்பது தெரிய வந்தது. மேலும், அவர் கோவையில் போலியான பெயருடன் தங்கியிருந்ததும், அங்கிருந்து பள்ளி ஆசிரியர் ஒருவரின் ஆதார் கார்டை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஷாரிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆட்டோ குக்கர் வெடித்து சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, குண்டுவெடிப்புக்கு முன்பாக ஷாரிக் நடமாடிய காட்சிகள் தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.