இந்தாண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி துவங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் காரசாரமாக பேசியிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை பிரதமர் மோடி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலளித்தார்.
அப்போது சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். ஒன்றரை மணி நேரமாக பிரதமர் மணிப்பூர் குறித்து பேசாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கையில்லா தீர்மான தோல்வியடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு 16 மணி நேரம். அதில் பாஜகவுக்கு 8 மணி நேரம். வரிந்துகட்டி பேசினார்கள்.
ஆனால் ஆளுங்கட்சியின் மணிப்பூர் எம்பி பேசவில்லை. 2 நிமிடமாவது பேசச்சொல்லுங்கள் என்று கேட்டோம். பேசவில்லை. அதற்கு பதிலாக மணிப்பூர் பற்றி பிரதமர் 2 நிமிடம் பேசினார் என பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.