ஓபிஎஸ் ஒண்ணும் யோக்கியவான் கிடையாது : அதிமுகவில் ஒற்றைத் தலைமை வரும் போது பல கட்சிகள் ஆட்டம் காணும்… காமராஜ் எச்சரிக்கை!!

மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் காலை 5 மணி முதல் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மாலை 6.30 மணிக்கு முடிவடைந்தது.

சோதனை ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் நாங்கள் வந்த காரில் ஏறிச் சென்றனர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்து கேட்டதற்கு அதிகாரிகள் பதில் ஏதும் அளிக்காமல் காரில் ஏறி சென்று விட்டனர்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறோம் .இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடியும். அதன்படி சந்தித்துள்ளோம். சோதனை மூலம் என்னையோ சாதாரண தொண்டனையோ ஒன்றும் செய்து விட முடியாது. இதன்மூலம் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை முடக்கி விடலாம் என திமுக நினைக்கிறது. அது ஒரு போதும் முடியாது.

பொதுக்குழு கூட்டம் 11-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக மட்டுமே பேசும் பொருளாக உள்ளது. பொதுக்குழுவை சிறுமைப்படுத்தவே ஆளுங்கட்சி இது போன்ற செயலில் ஈடுபடுகிறது. மிரட்டலுக்கு வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லிக் கொள்கிறேன். ஒற்றை தலைமை வந்தால் பல்வேறு கட்சிகளுக்கு ஆட்டம் காணும். அதன் காரணமாகவே இது போன்ற நடவடிக்கைகளை ஆளுங்கட்சி செய்கிறது.

என்னுடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதையே அதிகாரிகள் தங்கள் கைப்பட எழுதிக் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். செலவுக்காக வைத்திருந்த 60 ஆயிரம் பணத்தை மட்டுமே அதிகாரிகள் சோதனை செய்து அதை மீண்டும் திருப்பி கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.

பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும். அதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கும் என எதிர்பார்க்கிறேன். முறைகேடு செய்ததாக கூறும் பணத்தைவிட அதிகமாக கடன் உள்ளது. அவர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்றார்.

ஒ.பி.எஸ் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தார் இதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு காரணமா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது:- சொன்னவர் ஒன்றும் யோக்கியவான் அல்ல என பதிலளித்தார். மேலும் காலையிலிருந்து இங்கு வந்து எனக்கு ஆதரவு தந்துள்ள அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது குறித்து எதுவும் செய்து விட முடியாது என அறிக்கை அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

அப்போது அதிமுக அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் ஆர்.ஜி.குமார் ஒன்றிய குழு தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஒரு பிச்சைக்காரனால அரசாங்கமே ரிஸ்க்ல இருக்கு- தனுஷின் “குபேரா” படத்தின் கதை இதுதானா?

வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…

3 minutes ago

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

This website uses cookies.