காலையில் திருமணம்.. மாலையில் கொலை : தம்பதிகள் மாறிமாறி குத்திக் கொண்டதில் பலியான பரிதாபம்!

காலையில் திருமணம் செய்த காதல் தம்பதி மாலையில் இருவரும் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் கோலார் மாவட்டம், செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20).

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது. இதனிடையே மதிய வேளையில் புதுமணத்தம்பதிகளை முனியப்பபாவின் வீட்டில் இருந்த ஒரு அறையில் தனியாக வைத்தனர்.

அப்போது தம்பதிக்குள் பயங்கர தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. 2 பேரும் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து கிடந்தனர்.

இதை தொடர்ந்து, குடும்பத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் லிகிதா ஸ்ரீ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பே உயிரிழந்தார்.

எனினும் குடும்பத்தினர் நவீன் குமாரை மீட்டு ஜாலப்பா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு நகரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி நவீன்குமார் உயிரிழந்தார்.

இது தொடர்பாக நடந்த விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. அதில், அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். அதன்பிறகு இருவரும் காயமடைந்து உயிரிழந்துள்ளனர்.

புதுமண தம்பதி இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், காதல் மனைவி காதலன் என‌ இருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

11 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

19 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

54 minutes ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

1 hour ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

2 hours ago

முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!

ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…

2 hours ago

This website uses cookies.