அதிமுகவின் இந்த நிலைமைக்கே காரணம் அவங்க தான் : பழிபோடும் துரை வைகோ!!

மதுரை : அதிமுக பிளவுக்கு காரணமே பாஜக தான் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

மாமன்னர் திருமலை நாயக்கரின் 440வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள திருமலை நாயக்கரின் முழு உருவ சிலைக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ, நாயுடு மகா ஜன சங்க மாநில பொதுச் செயலாளர் ஸ்ருதி ரமேஷ், மாநகர மேயர் இந்திராணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :- மதுரையை தலைநகராக கொண்டு திருச்சி முதல் கன்னியாகுமரி வரை தென் தமிழ்நாட்டை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா இன்று. அவர் சிறந்த மக்கள் பணி செய்து அனைத்து மக்களாலும் போற்றக்கூடிய வகையில் மக்களின் மனநிலையை ஆண்ட மாமன்னர்.

அன்றைய காலத்திலேயே ஒரு சமூக நல்லுணர்வு ஏற்பட இந்த இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமை உணர்வு ஓங்கிட பாடுபட்டவர். இஸ்லாமிய மக்கள் போற்றும் வகையில் பள்ளிவாசல்களை கட்ட இலவசமாக நிலங்களை தானமாக கொடுத்தவர்.

அதே வகையில், இந்து மக்களும் பாராட்டக்கூடிய வகையில் பல கோயில்களை கட்டியவர். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் திருக்கோயிலையும் புனரமைத்து திருப்பணி செய்தவர்.

அந்த காலகட்டங்களிலேயே தென் தமிழகத்தில் சாலைகளை இணைக்கும் அரும்பணியை செய்தவர். இப்படி பல சிறப்பு வாய்ந்த பல பணிகளை செய்த மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு மாலை அணிவித்து சிறப்பு செய்தது பெருமையாக உள்ளது என்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கள் கூட்டணியில் உள்ள வேட்பாளர் ஈவிகே எஸ் இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவரது மகன் ஒன்றரை வருடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், ஏழை எளிய மக்களிடம் எளிமையாக பழகியவர். உதவிகள் பல செய்தவர். பெரியார் அவர்களின் குடும்பத்தில் ஒருவர் நிற்கிறார். அவருக்கு ஈரோடு தொகுதி மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள், எனக் கூறினார்.

பிளவு பட்ட அதிமுகவை ஒன்றிணைக்கும் வேலையை பாஜக செய்கிறதா என்ற கேள்விக்கு, அதிமுக பிளவுக்கு காரணமே பாஜக தான். எம்ஜிஆர் உருவாக்கி கட்டிக் காத்த இயக்கம். இந்த இயக்கம் பிளவுபட காரணமானவர்களை அதிமுகவினர் உணர வேண்டும், என்றார்.

புகையிலைப் பொருட்களுக்கு உயர்நீதிமன்றம் தடையை நீக்கியது குறித்த கேள்விக்கு,
உணவு பொருள் பாதுகாப்பு சட்டத்துக்குள் புகையிலை வராது. இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இந்த புகையிலைப் பொருட்களை தடை செய்ய ஒரு புதிய சட்டம் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். அல்லது அவற்றை வலு சேர்க்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும். அதேபோல புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடைக்காரர்களுக்கு கடமை உணர்வு இருக்கிறது. கடமை உணர்வை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

மேலும், புகையிலை பொருட்கள் தடைச் சட்டம் மறுபடியும் தமிழக அரசு கொண்டுவரும் என்ற நம்பிக்கை உள்ளது, எனக் கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

4 minutes ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

25 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

41 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

49 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

1 hour ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

This website uses cookies.