மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் திமுகவுடன் வைகோவின் மதிமுக கட்சி கூட்டணி அமைத்துள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவுடன் இணைந்தே போட்டியிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதிமுகவின் தலைமை பொறுப்பில் வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டார்.
வாரிசு அரசியலை எதிர்த்து விட்டு திமுகவில் இருந்து வெளியேறி கட்சி தொடங்கிய வைகோ, தற்போது அதே வாரிசு அரசியலில் தனது கட்சியையும் ஈடுபடுத்திக் கொண்டது பொதுமக்களிடையே மட்டுமின்றி கட்சியினரியும் அதிருப்திக்குள்ளாக்கியது.
இந்த நிலையில, மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடலாம் என்று கூறி வைகோவுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில், மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலசிறந்தது என்றும், மகனை அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் எள்ளி நகையாட வைத்து விட்டது என வைகோவை கடுமையாக சாடியிருந்தார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.