மதிமுக கட்சியில் இருந்து, அதன் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்க்கோனியை நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ.
இந்நிலையில் பொதுச்செயலாளர் வைகோவின் முடிவை கண்டித்து, மதிமுக பொறுப்பாளர்கள் 28 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்கோனி, மதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ஆக இருப்பவர், இவர் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் உட்பட பல்வேறு உயரிய பொறுப்புகளில் இருந்து, கட்சிக்காக கடுமையாக உழைத்து, படிப்படியாக முன்னேறி தற்போது மாவட்ட செயலாளராக உள்ளார்.
இந்த சூழலில் தான் மார்க்கோனி, அதிமுக கவுன்சிலர்களின் உதவியுடன் தன் தாயை நகராட்சி தலைவராக திட்டமிட்டு இருப்பதாகவும். இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சந்தித்து அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வைகோ அவரை கட்சியிலிருந்து நீக்கினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து மார்கோனி நீக்கப்பட்டதை கண்டித்து மதிமுக கட்சியின் பொருளாளர்கள் 28 பேர் தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இது தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
This website uses cookies.