எம்பி சீட் கிடைக்காததால் ஈரொடு எம்பி கனேசமூர்த்தி தற்கொலை என்ற செய்தியை ஒரு சதவிகிதம் கூட நான் நம்ப மாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு எம்பி கனேசமூர்த்தி மறைவிற்கு செல்ல, கோவை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது :-திமுக உறுப்பினராக வேண்டா வெறுப்பில் சேர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினரானார் கணேச மூர்த்தி. இப்போது திமுக உறுப்பினராக இருந்து கொண்டு வேறு பொறுப்பிற்கு வரமுடியாது.
சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்பொழுது இரு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள், என்று என்னிடம் கூறி இருந்தார். ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று சொல்லி இருந்தார். தேர்தல் முடிந்த பின்பும் இருவரும் வீடுகளுக்கு சென்று வந்திருக்கின்றோம்.
உயிருக்கு உயிராக 50 ஆண்டாக பழகி இருக்கின்றோம். கொள்கையும், லட்சியமும் பெரிது என வாழ்ந்தவர் கணேசமூர்த்தி. ஆனால் சில நாட்களாகவே அவர் மிகவும் மன அழுத்ததில் இருப்பதாக என்னிடம் ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டியவர்.
இந்த முடிவிற்கு வருவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பெரிய இடி தலையில் விழுந்தததை போல இருக்கின்றது. அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை விட மருந்து குடித்து விட்டார் என்ற செய்தியே எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது, என்று கண்ணீருடன் நா தழுதழுக்க அழுதார்.
மேலும், பேசிய அவர், மருத்து குடித்து விட்டார் என்ற போதே, எனக்கு உயிர் போய்விட்டது. எம்.பி.சீட் கிடைக்காத்தால் இறந்தார் என்பது உண்மையல்ல, பலர் அவ்வாறு கூறிவருகின்றனர். இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன், என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.