சென்னையில் நேற்று நடந்த பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை அன்புமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உடனிருந்தனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரும் வாழ்த்தினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு, அரசியல் எதுவும் பேசவில்லை.
பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டமாக, கிராமமாக சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளேன் என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.