அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மட்டுமே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையில் நடைபெற்ற பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட தீர்மானங்கள் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டற்கான சான்றிதழை கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி வாங்கினார்.
அதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடிவருகின்றனர்.
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வலம் வரும் நிலையில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே…
அனிருத் இசை நிகழ்ச்சியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததாக தகவல் அனிருத்தின் இசை…
அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் வடவள்ளி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கோவை…
புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் திமுக வடக்கு மாவட்ட பூத்கமிட்டி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக…
பண மோசடி வழக்கில் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் சௌபின் சாஹிரை போலீஸார் கைது செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மரண ஹிட்…
போதை பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுக ஐடி…
This website uses cookies.